Selvi Nithianandan

பகலவன்

அண்ட வெளியில்
உனது ஆட்சி
அல்லும் பகலும்
மாறிடும் காட்சி
அவனியில் பற்பல
நாமமாய் சாட்சி
அணையா விளக்காய்
ஒளிரும் நீட்சி

ஆரோக்கிய வாழ்வின்
அத்திவாரம்
ஆனந்தமாய் உயர்வின்
அத்தியாயம்

அழகாய் கிடைக்கும்
நியதி
அதுவே சத்துக்கும்
உறுதி

கோடை வந்தாலே
ஆரவாரம்
ஜாடையாக பூக்களின்
வரவும்
வாடையாய் பொருளும்
நாறும்
ஆடையும் பலவித
மாற்றமாகுமே..

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading