Selvi Nithianandan

வேலி அடைப்போம்

பனை ஓலை வெட்டி
மட்டையுடன் ஒரு பக்கம்
தென்னை ஓலை கிடுகு
மறு பக்கம் அழகாக்கும்

முட்கம்பி முள் கிலுவை
முதுகினை பதம் பார்க்கும்
முட்டுக்கட்டை பூவரசு மரமும்
முண்டி அடித்து வளர்வாகும்

அண்டை வீடு பார்க்காமல்
அணைத்து காத்த வேலியாகும்
ஆணித்தரமாய் எமது குளியலுக்கு
அடைத்து மறைத்த வேலியாகும்

நாலு பக்க வேலிகள்
நல் இனிய உறவாகும்
நன்மை தீமை வந்தாலே
நடுப் பொட்டு வழியாகும்

அக்கம் பக்கம் எல்லாம்
ஆணி அடித்த மதிலாகும்
அழகு கொண்ட வேலியும்
அரண்மனை சுவர்போல் உருவாம்
அடுத்த ஜென்மம் ஒன்றென்டா
அடைத்து பார்த்து காப்போமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading