“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

Selvi Nithianandan

அன்னையின் மூன்று ஆண்டா

காலச்சக்கரம் வேகமாய் சுழலுது
கனதியாய் இதயமும் நோவுது
காலமும் மூன்றாய் கடக்குது
கண்ணீரும் கலங்கியே வடியுது

வாரம் ஒருபேச்சு காதில்கேட்கும்
வந்த செய்தி வாட்டியே வதைக்கும்
வதனமும் எப்போதும் மலர்ந்தேநிற்க்கும்
வனப்பான உம்முருவம் வந்துபோகும்

கண்ணாடி அணிந்தும் பார்க்கவில்லை
பின்னாடி யாரையும் பேசியதில்லை
பத்திரிகை படிக்காமல் இருப்பதில்லை
பசியென்று வாய்திறந்தும் கேட்டதில்லை

பத்திரமாய் சொல்லும் வார்த்தைகூட
இப்போ ஒலிக்கவில்லையே

Nada Mohan
Author: Nada Mohan