Selvi Nithianandan

ஆதவனே ஆட்சி

அண்டமே உன்னாலே ஆட்சி
அசரவைக்கும் ஒளியின் காட்சி
அவனியே அதற்கு சாட்சி
அனலாய் கொதிக்கும் நீட்சி

பல நாமங்களை கொண்டுள்ளாய்
பயன்பாடு பலவற்றுள் பங்களிப்பாய்
பகுதிகளிடை கடும் குளிர்சியாய்
இருளாகவும் காட்சி தருகிறாய்

பூமிக்கு அருகிலே விண்மீனாய்
புவியின் விட்டத்தைவிட அதிகமாய்
பக்கமே நெருங்க முடியாதவனாய்
படைப்பிலே நிலவும் துணையாய்

கோடை வந்தாலே மக்கள் கூட்டம்
கொழுத்தும் வெய்யிலும் கடற்கரை நாட்டம்
அழகின் ஒளியாய் அனைத்திலும் இருப்பாய்
அன்றாட வாழ்விற்கு அவசிமாகிறாயே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading