பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

Selvi Nithianandan

சோகமா அல்ல சோதனையா

தாயகத்துக்கு விடுமுறை சென்று
தாயுடன் நான்குமாதம் நின்று
முடிந்தவரை உதவி புரிந்து
தவிப்புடன் இங்கு வந்தாரே

சடுதியாய் வந்த சுகயீனம்
சற்று பொறுமைஇழந்த சோகம்
அவசரமான எமது பயணம்
அவலமாய் தடைப்பட்ட நிலைமை

முதுமையில் தனிமை தாக்க
முரண்படும் வார்த்தையால் அகமும்நோக
இளமைக் காலத்தை எண்ணி வருந்த
முடங்கிடுவேனோ மனப்பயமும் அதிகரிக்க

செய்வதறியாது மகவும் வருந்த
செத்துவிடுனோ அன்னையும் புலம்ப
செய்நன்றி மறவா உறவுகளும் உதவிட
நற் செய்தியாய் கிடைக்கட்டும் வாழ்விலே

Nada Mohan
Author: Nada Mohan