கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

Selvi Nithianandan

அகவையின் உயர்வு

அகவை உயர்ந்து கொள்ள
ஆளுமை சிறந்து விளங்க
அன்பால் படர்ந்து விரிந்து
அரவணைப்பில் உச்சம் செறிந்து
ஆசாத்திய திறமை கண்ட
அதிபருக்கு அகவை திருநாளாம்

பவளவிழா மெல்லென கண்டு
பவித்திரமாய் சிறுவர்களை கொண்டு
பல்துறை வித்தை கற்று உயர்ந்து
பா முகமாய் வரவேற்க்கும் வேந்தனுக்கு
பாக்கியமாய் பலருக்கு கிடைத்திட
பரிசான அகவை திருநாளாம்

நாதக்குரலோன் கிடைத்திட்ட பட்டம்
நானிலித்தில் சுற்றிவரும் கூட்டம்
நாளும் நன்றியாய் வடம் இழுக்கும் திட்டம்
நலமுடன் வளமாய் என்றும் வாழ்கவே
நற்றமிழ் பணிக்கு வலு சேர்கவே

வாழிய பல்லாண்டு வாழிய பல்லாண்டு

Nada Mohan
Author: Nada Mohan