கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

ஒன்று பட்டு
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஆன்றோர் வாக்கு அன்று
ஒற்றுமையே பலமாய் இருந்தால்
ஒருமித்தே மகிழலாம் இன்று

ஐந்தறிவு கொண்ட ஜீவனும்கூட
ஒற்றுமை பலத்தை காட்டிநிற்கும்
ஆறவுகொண்ட மனிதர்மட்டும்
பிளவு பட்டு நிற்பதைக் காண்போம்

புலத்து வாழ்வில் போட்டி பொறாமை
புடம் போட்டு பார்க்கும் மனிதம்
வடம் இழுக்க சேர்வில் நாமும்
வலிந்து இணைவில் செல்லல் வேண்டும்

ஒன்றாய் கரமும் இணைந்திட்டாலே
ஓசைகூட சத்தமாய் இணையும்
நன்றாய் வாழ்வு அமைந்திடவே
நற்பணி செய்து வாழ்ந்திடலாமே

: செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading