Selvi Nithianandan

விடியல்

ஆதவனின் விடியல்
அவனிக்கே மகிழ்வு
ஆனந்தமாய் இருக்குமே
அற்புதச் சிறப்பு

கிழக்கின் உதயம்
மேற்கின் மறைவு
வடக்கு தெற்கு
திசையும் இணைவு

விடியலின் மலர்வில்
பூக்களும் மலரும்
விசும்பின் ஒளியால்
விருட்சமும் மகிழும்

விடியும் காலை
விருப்புடன் எழுந்து
பொறுப்பாய் நடந்து
பெருமிதம் கொள்ளு

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading