இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

சித்திரை வந்தாலே (565)

சித்திரை வந்துவிட்டால்
நித்தரையும் குறையும்
எத்தரையும் ஓளியாய்
எழிலாய் காட்சிதரும்

ஆலயங்கள் விழாக்கள்
வரிசையாய் வந்திடும்
அகவை கொண்டாட்டமும்
அடுத்து சேர்ந்திடும்

சித்திரை வரவும்
எழிலாகும் எண்ணம்
சித்திரமாய் கொள்ளையிடும்
மலர்களின் வண்ணம்

ஆதவனின் கதிருக்காய்
வெளியேயும் ஓடல்
ஆனந்தமாய் கிடைக்கும்
விற்றமீனும் நாடல்

சித்திரை வருடமும்
பலருக்கு மகிழ்வு
முத்திரையாய் சீர்பெற்று
பிறக்கட்டும் சிறப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading