Selvi Nithianandan

சித்திரை வந்தாலே (565)

சித்திரை வந்துவிட்டால்
நித்தரையும் குறையும்
எத்தரையும் ஓளியாய்
எழிலாய் காட்சிதரும்

ஆலயங்கள் விழாக்கள்
வரிசையாய் வந்திடும்
அகவை கொண்டாட்டமும்
அடுத்து சேர்ந்திடும்

சித்திரை வரவும்
எழிலாகும் எண்ணம்
சித்திரமாய் கொள்ளையிடும்
மலர்களின் வண்ணம்

ஆதவனின் கதிருக்காய்
வெளியேயும் ஓடல்
ஆனந்தமாய் கிடைக்கும்
விற்றமீனும் நாடல்

சித்திரை வருடமும்
பலருக்கு மகிழ்வு
முத்திரையாய் சீர்பெற்று
பிறக்கட்டும் சிறப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading