Selvi Nithianandan

நடிப்பு

உள்ளொன்று வெளியொன்று
உள்பூசல் மறைப்பென்று
உண்மைகூட பொய்யாகி
உருவகித்து நாடகமாடி
உதிரத்து உறவுகள்
உறவாடும் ஜென்மங்கள்
உலகினியே பலநிலையே
உரமாகும் இழிநிலையே

உயிர்போகும் வேளையும்
உணர்வுதனை மதியாது
உடன்பணம் வேணுமென
உறுதியாய் பதில்வரும்
உறுத்தலாய் நடித்தே
உழைப்பும் செலவாகும்

உலகினிலே பலரகமாய்
உருகிவிடும் வேடமாய்
உருட்டும் பிரட்டுமாய்
உச்சக் கட்டமாய்
உணவுக்கும் உடைக்கும்
உதவிக்காய் நடிக்கின்றனரே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading