இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

மாறிடும் நிலை (568)
குளிரும் முடிந்து வெயிலாய் மாறி
ஒளியும் வந்து தூக்கம் கலைந்து
வெளியும் நல் ஒலியாய் போக
விழியும் வீங்கி வலியாய் போகுது

பள்ளி விடுமுறை வந்தும் சேர
துள்ளிக் குதிக்கும் சிறுவர் கூட்டம்
காலை மாலை வெளியில் ஓட்டம்
கண்டு களிக்க இருக்கையில் இருப்பு

குளிர்மை தேடி கால்வாயில் ஒருபுறம்
கடலும் நிரம்பி வழியும் மறுபுறம்
நீச்சல் தடாகமும் வழிந்து ஓடும்
கூச்சல் போட்டு விளையாட்டு செல்லும்

வீட்டுக்கு வெளியே குடையும் விரிப்பு
வீதிக்கு வந்தால் தேகமும் எரிப்பு
விஞ்ஞானம் கூடியே பற்பல பாதிப்பு
விந்தையாய் இருக்குதே வியப்பாய் சூழலே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading