Selvi Nithianandan

பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும் ( 571)
ஆண்டுகள் பலவாய் கடந்திட்டாய்
மீண்டுமாய் பொலிவாய் வந்திட்டாய்
வெண்ணிறப் பூச்சின் அழகினிலே
வெந்தணல் என்றும் அழியாதே

பற்பல நூல்களும் அறிவுக்கு
பண்டைய நூல்களும் தெளிவுக்கு
அடுக்குகள் கவருமே கண்ணுக்கு
அடிக்கடி போவரும் பலருண்டு

பலரது உதவியின் கையிணைவு
பணமாய் நூலாய் பகிர்ந்தளிப்பு
பலஆயிரம் நூல்களாய் எரிப்பு
பழமையான சுவடிகள் அழிப்பு

புனரமைப்பு பெற்றதே மீண்டும்
புத்துயிராய் கிடைத்ததே இன்று
புகழுடன் இருப்பதும் நன்று
புகலிட வாழ்விலும் மறக்காத சிறப்பு.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading