Selvi Nithianandan

மூண்ட தீ

எழுபத்தைந்து ஆண்டின் வரலாறு
ஏகாதிபத்திய ஆட்சியின் விளைவு
ஏராளமான தீயின் வெளிப்பாடு
எரிந்து சாம்பல் ஆனதே

சுதந்திரமடைந்த நாட்டிலே
சுவாலை யாகும் போதிலே
சுருண்டு வீழ்ந்த மானிடம்
சுக்கு நூறாய் சிதறியதே

எத்தனை கொடிய விசக்கிருமிகள்
அத்தனை உள்நோக்க அழிப்புக்கள்
மூண்டதீயில் மாண்ட நூலகம்
மீண்டும் உயிர்த்து எழுந்ததே

கலவரம் என்றாலே தீவைப்பு
கடைஎரிப்பு வந்திடும் நினைவு
நிலவரம் மாறாத வடுக்கள்
நித்திலமும் மாறியதே அனலாய்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading