Selvi Nithianandan

மூண்ட தீ

எழுபத்தைந்து ஆண்டின் வரலாறு
ஏகாதிபத்திய ஆட்சியின் விளைவு
ஏராளமான தீயின் வெளிப்பாடு
எரிந்து சாம்பல் ஆனதே

சுதந்திரமடைந்த நாட்டிலே
சுவாலை யாகும் போதிலே
சுருண்டு வீழ்ந்த மானிடம்
சுக்கு நூறாய் சிதறியதே

எத்தனை கொடிய விசக்கிருமிகள்
அத்தனை உள்நோக்க அழிப்புக்கள்
மூண்டதீயில் மாண்ட நூலகம்
மீண்டும் உயிர்த்து எழுந்ததே

கலவரம் என்றாலே தீவைப்பு
கடைஎரிப்பு வந்திடும் நினைவு
நிலவரம் மாறாத வடுக்கள்
நித்திலமும் மாறியதே அனலாய்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading