Selvi Nithianandan

பாட்டி
தந்தைவழி பாட்டி
தரணியில் எமக்கு
கிடைத்த பொக்கிசம்
சிங்கப்பூரின் பிறப்பிடம்
உரும்பிராய் வாழ்விடம்

சிரித்த வதனமும்
சீரிய பண்பும்
சீற்றம் அறியா
சீதேவி ஆவார்

தாய்வழி ஆச்சி
தப்பு செய்திட்டா
தண்டம் கொண்டு
துரத்தி விடுவார்

சேலையில் கைப்பைக்குள்
தாம்பூலம் இருக்கும்
கொட்டகப் பெட்டியுள்
சில்லறை சிணுங்கும்

ஞாயிறு வந்திட்டா
முழுக்கு நடக்கும்
பேரம் பேசித்தான்
குளிப்பாட்டி விடுவேனே

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading