தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Selvi Nithianandan

பாட்டி
தந்தைவழி பாட்டி
தரணியில் எமக்கு
கிடைத்த பொக்கிசம்
சிங்கப்பூரின் பிறப்பிடம்
உரும்பிராய் வாழ்விடம்

சிரித்த வதனமும்
சீரிய பண்பும்
சீற்றம் அறியா
சீதேவி ஆவார்

தாய்வழி ஆச்சி
தப்பு செய்திட்டா
தண்டம் கொண்டு
துரத்தி விடுவார்

சேலையில் கைப்பைக்குள்
தாம்பூலம் இருக்கும்
கொட்டகப் பெட்டியுள்
சில்லறை சிணுங்கும்

ஞாயிறு வந்திட்டா
முழுக்கு நடக்கும்
பேரம் பேசித்தான்
குளிப்பாட்டி விடுவேனே

Nada Mohan
Author: Nada Mohan