Selvi Nithianandan

ஏன் இப்படி (580)
மூளை என்ற பொக்கிசத்தில்
மூட்டையாய் பலவேதனை
முடிச்சு அவிட்டுபோட்டாலும்
முடியாத வேதனை தொடராய்

எண்ணங்கள் ஒருபுறம் தோன்ற
ஏங்கங்கள் மறுபுறம் கொண்டிடும்
வண்ணமாய் அமைத்திட முயன்றுமே
வசந்தமாய் துளிர்ரெழ முடியலையே

நான்கு சுவருக்குள்ளே பெருமூச்சு
நட்டநயம் அறியா கேள்வியும்
நாலும் மெல்லநகர்வுடன் செல்ல
நாணய வார்த்தையும் அதிகரிக்கும்

அகவை அதிகரிக்க ஆளுமைகுன்றிட
அன்பும் அமைதியாய் மெல்லவே பணிந்திட
அவனியில் எம்மைவிட எத்தனை மானிடம்
மீளமுடியா சோகத்தில் சிந்திக்கின்றேனே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading