Selvi Nithianandan

ஏன் இப்படி (580)
மூளை என்ற பொக்கிசத்தில்
மூட்டையாய் பலவேதனை
முடிச்சு அவிட்டுபோட்டாலும்
முடியாத வேதனை தொடராய்

எண்ணங்கள் ஒருபுறம் தோன்ற
ஏங்கங்கள் மறுபுறம் கொண்டிடும்
வண்ணமாய் அமைத்திட முயன்றுமே
வசந்தமாய் துளிர்ரெழ முடியலையே

நான்கு சுவருக்குள்ளே பெருமூச்சு
நட்டநயம் அறியா கேள்வியும்
நாலும் மெல்லநகர்வுடன் செல்ல
நாணய வார்த்தையும் அதிகரிக்கும்

அகவை அதிகரிக்க ஆளுமைகுன்றிட
அன்பும் அமைதியாய் மெல்லவே பணிந்திட
அவனியில் எம்மைவிட எத்தனை மானிடம்
மீளமுடியா சோகத்தில் சிந்திக்கின்றேனே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading