தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Selvi Nithianandan

மாவீரரே
கார்த்திகை வந்தாலே
கண்ணீராய் நனைந்திடும்
கல்லறைகள் எல்லாம்
ஒளியாய் காட்சிதரும்

காரிருள் சூழ்ந்திடும் வீரருக்காய்
காசினி பொழிந்திடும்
தூறலாய்
காந்தள் மலருமே
தூய்மைக்காய்
காரணன் சொல்லிட்ட
வாய்மைக்காய்

காலங்கள் ஓடித்தானும்
செல்லுதே
காரிகை அகமும்
துடிக்குமே
ஞாலத்தில் காவியமாய்
நிலைபெறவே
கனவுகள் நிலைத்திட
பாலமாய் நாமும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan