Selvi Nithianandan

நீரழிவு

விந்தையான உலகினிலே
விஞ்ஞானமும் அதிகம்
விழுதுகள்போல் பலருக்கு
விரும்பிடாத நோயினதுதாக்கம்

சிறுவர்முதல் பெரியோர்வரை
சிம்மாசனமான இருப்பு
சிக்கனமாய் கையாளல்
சிறந்ததொரு பொறுப்பு

இரத்தில்சர்க்கரையின் அளவு
இழப்பாய்தான் சேரும்
இன்சுலின் குளிசை தேவை
இரண்டாகவும் மாறும்

இதயநோய் பக்கவாதம்
இரத்தஅழுத்தம் கண்நோய்
இப்படியே கிட்னிவரைசெல்லும்
உணவுக்கட்டுப்பாடு நடைப்பயிச்சி
நீச்சல்பயிச்சி அவசியமாகும்

உருண்டோடும் உலகுனிலே
உறுதியான மூவகையாம்
உடலெடை குறைப்பும்
உறுதியான தீர்வாம்

யாரழிவார் நீரழிவால்
யாமறிவோம் மேதினியில்
யாக்கைதனை காத்திட்டு
யாவருமே வாழ்திடலாம்.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading