Selvi Nithianandan

கடந்து வந்த பாதையில் (594)

முட்டுக்கட்டையில் பல பாதைகள்
முள்ளாய் குத்திய தருணம்
வலியாய் முனைந்து எழுந்து
வாஞ்சையாய் அணைத்த சரிதம்

பலருக்கு வழிகொடுத்து எழவைத்து
பலதாய் உருவாக்கம் பெறவைத்து
பசிதனைக்கூட மறக்க வைத்து
பண்பாய் அரவணைத்த தடயம்

விழுந்து விழுந்து மெல்லென உயர்ந்து
விழுதாய் பலதும் அகத்தினில் படிந்து
விம்பம் போல நாளும் தொடர்ந்து
விடாது நானும் இதனைப்பற்றியே

Nada Mohan
Author: Nada Mohan