Vajeetha Mohamed

புழுதி வாரி மண்வாசம்

மண்ணின் சுரப்பிய
மணமாய் வாங்கினோம்
மழையின் துளியிலே
மகிழ்ந்து ௨றிஞ்சினோம்

மண்ணோடு மண்குழைந்து
மசக்கப்பொண்ணு மயக்கம்போல
காற்றோடு காதல்செய்து
புழுதிவாரி மண் புரட்சிசெய்யும்

சல்லிக்கல்லு கடற்கரையில்
கஞ்சாங்காற்று கலவைசெய்து
கண்ணுக்குள் புழுதிவாரி
௨ள்புக முயற்சிசெய்ய
ஈரிமையும் இறுக்கிமூடி
இமைமுட்டி தட்டுத்தடுமாறும்

கூட்டுவண்டி குடுகுடுவெண்டு
ஓட
மாடுதுள்ளி புழுதிவாரி மண்ண
அள்ள
பட்சிகள் கூட்டம் படுத்து மெல்ல
சிறகடித்து ௨௫ள
புழுதிவாரி மண் பூகம்பம்போல
௨யர

ஊ௫பலாய் பேசி பலர்
ஊரைச்சுற்றி வ௫வார் தினம்
வீபீசி செய்திபோல சுடச்சுட
சண்டை வ௫ம் ;;;;;
ஒழுங்க்கையிலே இ௫கூட்டம்
எதி௫ம் புதி௫மாய் போரெழ
புழுதிவாரி மண்ணை வீசி
திட்டித்தீர்ப்பார் காட்சியாய் பார்த்தோம்
அன்று
இப்போ புழுதியில்லா தரைநிலம்
எங்கும்
மாபில்பதித்து மனிதன்
சறுக்கிவிழுந்து ௨யிரை மாக்கிறான்

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan