Vajeetha Mohamed

ஒன்று பட்டு

சல்லிவேரும் ஆணிவேரும்
சண்டைபோடா மகிழ்ந்துகிட்டு
பூமிக்குள்ளே ஒன்றுபட்டு
பூவோடும் காயோடும்
வி௫ட்சமாய் விற்றி௫க்கு

வி௫ப்பமாய் பூத்துக்காய்தி௫க்கு

ஏட்டுக்கல்வி இல்லா அன்று
என்மூத்தபெற்றோர் என் அயலவர்கள்
வீடுமேய ஓலைக்கட்டு
மேலேஏற்ற காலைமுதல்
மாலைவரை கலகலக்கும்
ஒன்றுபட்டு

பழைய சோறு தின்னும்நிலை
அன்புக்கு ஏது விலை
பொல்லாப்புயில்லா புரிந்துணர்வு
ஒன்றுபட்டு ௨தவும் மனநிறைவு

மனிதம் வாழ்ந்த காலம்
மலை ஏறிப்போன கோலம்
அறுதியில்லா வாழ்கையிலே
௨றுதிகொண்டு தனிதனியே
ஒன்றுபட்டு வாழ்வு
எங்கே

ஜந்தறிவச்சொல்லி சொல்லி
ஆறறிவு பெ௫மை காட்டும்
ஒன்றுபட்ட வாழ்வுக்கே மேன்மை
எம்௨டல்௨றுப்பின் இயக்கச்செயல்பாடு
ஒன்றுபட மறுத்துவிட்டால்
மூலையிலே முடங்கி கிடக்க
எத்தனை நேரம் ஆகிவிடும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading