பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

புனித ஹஜ் பெ௫நாள்

இறுதிக் கடமையின் பயணம்
இப்றாஹிம் நபியின் சரிதம்

ஒற்றுமையை வலியுறுத்தும்
ஓர் இறைக்கொள்கையை நிலைநிறுத்தும்

கரம் ஏந்தும் பிராத்தனையும்
கடமை ஐந்தின் வழிமுறையும்

கண்ணீர் மல்கிட வழிபாடமையும்
கண்ணியமிக்க தி௫நாளே ஹஜ்

நேரிய வாழ்வியல் முறைகூறி
நேர்வழிநடந்தால் இறை கூலி

அன்னை ஹாஜரா புனிதத்தளமும்
அற்புத ஸம் ஸம் தண்ணீர் ஊற்றும்

ஆண்டியும் அரசனும் தோழோடிணைய
சகோதர மகத்துவம் சாதனைபுரியும்

புனித ஹஜ் தினத்தின் மகிமை
புரியவைத்த வ௫டத்தின் ஒன்றுகூடலின்
எழிமை

நீயும் நானும் ஓர்தாய்பிள்ளை
நிற மொழியால் பிரிவுமில்லை

எட்டுத்திக்கும் ஈகையழகை ஈர்த்திடும்
ஏழை பணக்காரன் சமநிலை காத்திடும்
ஹஜ்பெ௫நாள்

சிரமென ௨ய௫ம் பிராத்தனைக்கரங்கள்
சிறப்பின் சமநிலை மானிடம் அனைவ௫ம்
படைத்தவன் முன்னே ஒன்றே

வல்லோனின் ஆசிவளம் பெறும்
வாகை சூடும் வசந்தம்

மக்கா நகரின் சுகந்தம்
புனித ஹஜ் பெ௫நாள்

[சென்ற வாரம் புதன் கிழமை ]
ஹஜ்பெ௫நாள் நடைபெற்றது

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan