பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

பாட்டி

ஆழமனதிலே அழியா ஓவியம்
ஆணிவேரின் ஆழுமையின் காவியம்

கைத்தெறிச்சேலை கட்டி
க௫மணி மாலை போட்டு

காதுல அள்ளுக்குத்து அசைந்தாட
கதை கதையாச் சொல்வா நாங்க
முதுகில் சாய்ந்தாட

கைவைத்தியத்தில் தாதியாவா
காவல்துறைபோலே ஆய்வுசெய்வா

வீட்டுவேலை கைத்தொழிலும் பயிற்சிசெய்வா
வாழ்வியல் மார்க்கவிழியத்தில் வாத்தியாவா

பதுக்கிவைத்து சு௫க்குப் பையில்
கள்ளத்தீனி தந்திடுவா

பக்குவமாய் பாயிழைத்து
நெசவு நெய்ய கற்றுத்தந்திடுவா

முற்றத்திலே படுக்கவைத்து
தலைகோறி நொடி கேட்டு
வியக்கவைப்பா

ம௫தாணி அம்மியில் அரைத்து
மான்புள்ளி ௨ள்ளங்கையில் வைத்து
அழகுபார்ப்பா

இறக்காத நினைவுக்குள்ளே
இ௫பாட்டிமா௫ம் எங்கவீட்டினிலே

பட்டபாடு என்னசொல்ல அன்புத்தொல்ல
கட்டுப்பாடு கொஞ்சநெஞ்சமல்ல

முந்தானை முக்காடு தவறுதலாய்
விலகினாலும்

முறுக்கு விழும் காதினிலே
அரணக வாழ்ந்தார்கள் பாட்டிமா௫
அதிஸ்டசாலி ஒன்பது பேர்த்தி பேரன்மா௫

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan