பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அடையாளம்

சிவருபன் சர்வேஸ்வரி

அடையாளம்

அடையும் குறிக்கோள் இலட்சிய நோக்கு
அடைமானம் வைத்தும் அகதிகள் ஆயினர்
உடமையை வைத்தும் உறவுகளை விட்டும்
கடமையே பெரிதென
எண்ணியநோக்கால் அகதிகள்

அடையாளப் படுத்தவும் ஆளறிவுச் சான்றிதழ்
ஒப்பந்தச் சீட்டிலே உரிமையும் கோரல்
ஓடி ஓடி உழைத்து நின்றாலும் கண்டதும் என்னவோ
புலம்பெயர் அகதிகள் என்ற பட்டமே

வல்லவன் பம்பரம் வரம்பிலே ஆடினாலும்
சாதனை செய்துமே ஏட்டிலே பதித்தாலும்
வாதம் புரிந்து வசதிகள் பெற்றாலும்
ஞாலத்தில் பொறிக்கும் அடையாளம் அகதிதானே
உலகத் தமிழர் வரிசையில் என்றும்
உழைக்கும் கரங்கள் உயர்ந்து நின்றாலும்
காட்டும் முயற்சி தீவிரம் அடைந்தாலும்
உன்னதமாக அடையாளம் பெற்றது வரமோ
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading