அடையாளம்

சிவருபன் சர்வேஸ்வரி

அடையாளம்

அடையும் குறிக்கோள் இலட்சிய நோக்கு
அடைமானம் வைத்தும் அகதிகள் ஆயினர்
உடமையை வைத்தும் உறவுகளை விட்டும்
கடமையே பெரிதென
எண்ணியநோக்கால் அகதிகள்

அடையாளப் படுத்தவும் ஆளறிவுச் சான்றிதழ்
ஒப்பந்தச் சீட்டிலே உரிமையும் கோரல்
ஓடி ஓடி உழைத்து நின்றாலும் கண்டதும் என்னவோ
புலம்பெயர் அகதிகள் என்ற பட்டமே

வல்லவன் பம்பரம் வரம்பிலே ஆடினாலும்
சாதனை செய்துமே ஏட்டிலே பதித்தாலும்
வாதம் புரிந்து வசதிகள் பெற்றாலும்
ஞாலத்தில் பொறிக்கும் அடையாளம் அகதிதானே
உலகத் தமிழர் வரிசையில் என்றும்
உழைக்கும் கரங்கள் உயர்ந்து நின்றாலும்
காட்டும் முயற்சி தீவிரம் அடைந்தாலும்
உன்னதமாக அடையாளம் பெற்றது வரமோ
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading