நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நிழல் தேடும் வேளை

கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது நிழலின் தேவை
மனிதர்க்கு நிழல் தரும் மகத்தான மரங்கள்
குளிர்ந்த நிழலை தேடும் உயிர்க்கெல்லாம் வரங்கள்

வாழ்க்கையும் வெய்யிலைப்போன்றே துன்பங்கள் வந்தே சேரும்
வாட்டும் நேரங்கள் சோர்வினை கூட்டி கொள்ளும்
அப்போது நிழலாய் அன்பின் உறவும் பார்க்கும்
துணையாய் கரம் தாங்கி வலியினை போக்கும்

வெய்யிலின் போதுதான் நிழலின் அருமை புரியும்
துன்பத்தின் போதுதான் உண்மை உறவுகள் தெரியும்

ஜெயம்
02-07-2026

Nada Mohan
Author: Nada Mohan