பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

“அது ஒரு கனாக் காலம்”

நேவிஸ்பிலிப் கவி இல(477)

சின்னஞ்சிறு வயதினிலே
சித்திரமாய் நினைவினிலே
வாழ்க்கையின் சுகந்தமெல்லாம்
வர்ணக் கனவுகளின் கலவையிலே

அந்த நாளை நினைச்சாலே
எடுப்பாத்தான் எனக்கிருக்கு
கடலலையின் தாலாட்டுடன்
ஆலய மணி ஒசை
ஊரையே உசுப்பி விடும்

காலங்காத்தால
வெள்ளெனதான் விழித்தெழுந்து
பனங்காணி நடந்து சென்று
பனம்பழம் பொறுக்கியதும்

மழைக்காலம் வந்தாலே
விரைந்தோடி காட்டுக்குள்ளே
நாவல் பழம் துவரம் பழம்
துவடிப் பழம் காரப்பழம்
பறித்துண்ட ஞாபகமும்

என்னோட தம்பி தங்கை
என் வயது தோழியரும்
சுற்றத்து குட்டிகளும்கூடி
கூட்டான் சோறு சமைத்ததும்
அதெல்லாம் கனாக் காலமாய்

கிராமத்து வனப்பு எல்லாம்
கனவில் கண்ட காட்சியாய்
நாகரீக நாட்டத்திலே
மங்கியே மறைஞ்சு போச்சு..
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan