அன்னைக்கு நிகருண்டோ அவனியில்

அன்னைக்கு நிகருண்டோ அவனியில்.
அம்மா..!
அம்மாவின் கருவறையில்
நாங்கள் தெய்வம்
ஆலயத்தின் கருவறையில்
அம்மா தெய்வம்

உயிரோடு உடல் தந்தாள்
உலாவ விட்டாள்-தமிழ்
உணர்வோடு உணவு தந்தாள்
உயர வைத்தாள்.

இருள் வந்து சூழும் போது
நிலவாய் நின்றாள்
எமை வளர்த்து மரமாக்க
வேராய்ச் சென்றாள்

உறக்கமின்றி எம்மவர்க்கு
உயர்வைத் தந்தாள்
உழைத்துழைத்து- உலகத்தில்
ஓடாய்த் தேய்ந்தாள்

தனைமறந்து எமக்காக
வாழ்ந்த தாயை-அவள்
தந்த உயிர் பிரியுமட்டும்
நிறுத்தி வாழ்வோம்.
அம்மாதான் நேரில் கண்ட
அன்புத்தெய்வம்
அதைவிடவும் ஆலயங்கள்
தேவையுண்டோ..

-பசுவூர்க்கோபி-
நெதர்லாந்து.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading