புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

அபிராமி கவிதன்

“தீப ஒளியே”
தீவினை அகற்றி
நல்வினை புகட்டி
திருநாள் அன்று
தீப ஒளியேநீ வா வா

மக்கள் உயிரை
சுட்டுப் பொசுக்கும்
மாக்கள் எண்ணத்தைப்
மாற்றும் ஒளியேநீ வா வா

இயற்கை அழியும்
இன்னல்கள் இனியும்
இத்தரணியில் வேண்டாம்
இருளைக் களைத்து தீபஒளியே வா வா

பசியும் பட்டிணியும்
பல்வகை நோயும்
பாரினில் நீங்கிட
பரவச ஒளியேநீ வா வா

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
உலக நியதி—ஓரினம்
மனிதரென்போம் உற்றுமையுடன்
வாழவேண்டு ஒளியேநீ வா வா

தனக்கென்று வாழ்ந்தால்
தரணியாழ முடியாது
நமக்கென்று உழைத்தது
நம் உறவுடன் வாழ தீபஒளியேநீ வா வா

07.11.2023
அபிராமி கவிதன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading