“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக …01.03.2022
“புதைந்த ஞாபகம்”

உக்றையின் நாடே
உன்நிலை எனக்கும் வந்தனவே
துக்கம் நெஞ்சை
பக்கமடைக்கும் பகிர்ந்திடவே

உயிரை காக்க
உறவைமீட்க இடம் பெயர்ந்தோம்
துயிலும்இரவு விடிந்திடாமலே
துயர் பெற்றோம்

பிரிந்த இல்லம்
பின்புஅடைந்திடும் உரிமை இழந்து
பிரியா விடைபெற்றோம்

குண்டு மழையும்
குடித்தன உயிர்களை
நண்டு பிடியாய்
நாட்புறமும் தாக்கியே

ரஷ்சிய நாட்டின் ரகசியசூழ்ச்சியாய்
புசுப்பம் கரிகிட பொசுங்கி மடிந்தனர்

சண்டை ஓய்து
சமரசம் நிலவ
கண்டும் மகிழ்வேன்
கண்களுக்கு இனியென என்றே

நன்றி வணக்கம்🙏
பாவை அண்ணா..

Nada Mohan
Author: Nada Mohan