“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

அபிராமி கவிதாசன்

விருப்பு தலைப்பு ! 31.03.2022

நேரிசை கலிவெண்பா
“ பெண்ணின் பெருமை “

பிறப்பினை ஈன்றிடும் பெண்ணின் பெருமை
சிறப்புடை மானிடத்தின் சீர்மை – அறமாம்
திறமுடை சக்தியால் திண்ணம் நிறைய
இறக்கும் சுமையின் இறை

குலத்தில் விளக்காய் குலமகளாய் நிற்பாள்
நலத்தில் அக்கறை நல்கி-நிலமாய்
இலட்சம் படைப்பாள் இலட்சியம் வெல்வாள்
உலகினை ஆழ்வாள் உழைத்து

எறும்பின் உழைப்பினை எள்ளி நகைப்பாள்
உறுதியின் உண்மையின் உள்ள- அறும்பு
சிறுதுளி வெள்ளமாம் சிக்கனத்தின் செம்மல்
இறுதிவரை காத்திடுவாள் ஈந்து

பின்னுறங்கி முன்னெழும் பெண்மை முழுமதி
புன்னகை சிந்திடும் பூவினத் – தென்றலாம்
அன்றலர் மல்லிகை அன்பியப் பெண்மகள்
மன்றினில் நிற்பாள் மலர்ந்து

மகளிரை வாழ்த்துகின்றேன் மாண்பினை போற்றி
புகழுரை சூட்டி புனித அகத்தால்-
சிகரத்தை எட்டிடும் சித்திர பெண்மை
பகலவன் தீபமாம் பாருக்கு

நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan