“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

10.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 174
தலைப்பு !
“வார்த்தை அம்பு “
உள்ளம் நோக
உரைக்கும் வார்த்தை
தெள்ளிய மனத்தினில்
தெளிவாய் பதியுமே

அள்ளியே சொற்களை
அம்பென எய்திட
துள்ளியே துடித்திடுவர்
தூண்டில் மீனாக

விதைத்ததே அறுவடை
வினைப்பயன் விளைவாக
எதையுமே எங்கேயும்
எள்ளியே நகைக்காதே

கூடி கற்றிடல்
கோடி பயனுண்டு
நாடி பயின்றிடும்
நட்பிற்கு அழகுண்டு

உள்ளொன்றும் புறமொன்றும்
உரைத்திடல் அழகன்று
வெள்ளை உள்ளத்தின்
வெண்சங்கு நகைப்பழகு

நன்றி பாவை அண்ணா🙏

Nada Mohan
Author: Nada Mohan