வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக 24.05.2022
தலைப்பு !
அணையா அகல்விளக்கே

ஆளுமை ஒளிச்சுடரே
ஆராதனை செய்கின்றேன்
நாளும் பொழுதெல்லாம்
நற்சிந்தனை விதைத்தீரே /

அணையா அகல்விளக்கே
அணைந்திட துடித்திட்டேன்
இணைகர பெண்ணியமே
இதயம் பொறுக்கலையே /

துணிவாய் வாழ்ந்திட
துணையாய் இருந்தீரேஅம்மா
தணியா கவித்தாகம்
தனிந்து அணைந்தனவோ /

பௌர்னமி முழுநிலவே
புன்னகை மதிமுகமே
மௌனமாய் கண்ணுறங்கி
மரணித்துப் போனீரோ /

கவித்துவக் காவியமே
கனத்திட மறந்தீரோ
புவியினில் கவிவாச
புகழ்பாடி பிரார்த்திப்போம் /
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !😭😭😭🙏

அம்மா! அழகுத் தேவதையயே!
ஆற்றல் மிகு ஆசானே
நிலவாய் சிரிக்கும் முகத்தை எப்போ காண்போம்.
பெண்ணியத்தின் பெருநிதி. தன்னலமற்ற தாயே! தமிழ்ச்சுடரே! உங்களின் இறுதிக்கவியரங்கு என்றா? என்னையும் அழைத்தீர்கள்.

அம்மா உங்கள் பெருமையைக்கண்டு வியக்கின்றேன் . ஆழ்ந்தவேதனையுடன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
கோசல்யா அம்மா😭🙏

நன்றி வணக்கம் பாவை அண்ணா🙏😌

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading