சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக 24.05.2022
தலைப்பு !
அணையா அகல்விளக்கே

ஆளுமை ஒளிச்சுடரே
ஆராதனை செய்கின்றேன்
நாளும் பொழுதெல்லாம்
நற்சிந்தனை விதைத்தீரே /

அணையா அகல்விளக்கே
அணைந்திட துடித்திட்டேன்
இணைகர பெண்ணியமே
இதயம் பொறுக்கலையே /

துணிவாய் வாழ்ந்திட
துணையாய் இருந்தீரேஅம்மா
தணியா கவித்தாகம்
தனிந்து அணைந்தனவோ /

பௌர்னமி முழுநிலவே
புன்னகை மதிமுகமே
மௌனமாய் கண்ணுறங்கி
மரணித்துப் போனீரோ /

கவித்துவக் காவியமே
கனத்திட மறந்தீரோ
புவியினில் கவிவாச
புகழ்பாடி பிரார்த்திப்போம் /
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !😭😭😭🙏

அம்மா! அழகுத் தேவதையயே!
ஆற்றல் மிகு ஆசானே
நிலவாய் சிரிக்கும் முகத்தை எப்போ காண்போம்.
பெண்ணியத்தின் பெருநிதி. தன்னலமற்ற தாயே! தமிழ்ச்சுடரே! உங்களின் இறுதிக்கவியரங்கு என்றா? என்னையும் அழைத்தீர்கள்.

அம்மா உங்கள் பெருமையைக்கண்டு வியக்கின்றேன் . ஆழ்ந்தவேதனையுடன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
கோசல்யா அம்மா😭🙏

நன்றி வணக்கம் பாவை அண்ணா🙏😌

Nada Mohan
Author: Nada Mohan