அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும்
சந்திப்பு வாரம்-247

சிரிப்பு
….
வான்முகில்கள் மோதலிலே
வெடிச்சிரிப்பு – இரு
வல்லரசுகள் மோதலிலே -ஏவு
கணைச் சிரிப்பு!

தேன்இதழ்கள் மோதலிலே
காதல் சிரிப்பு-அந்த
இயற்கைமகள் பார்வையிலே
அழகின் சிரிப்பு!

கருங்குயில்கள்வாய் திறந்தால்
இசைச்சிரிப்பு-மொட்டு
மலர்விரிப்பில் தோன்றுவதோ
பூஞ்சிரிப்பு!

மழலையர் புன்னகையில்
மலர்வதோ-அந்த
மாயவனாம் எம்கடவுள்
கண்ணனின் சிரிப்பு!

என்மகன் கவிதனின்
குரலோசையிலோ – திரு
வள்ளுவரின் வாய்மொழியாம் தமிழமுதக்குறள் சிரிப்பு!

சந்தேகப்பேர்வழிகள்
உதட்டினிலே எப்பொழுதும்-தோன்றும்காண்
அகந்தையெனும் ஆணவச் சிரிப்பு!

தேசியத் தலைவரை
நேசிப்பவர் முகத்தினிலே – மலரும்
அன்பின் உருவான
தாயின் சிரிப்பு!

எங்கள் மக்கள் ஒருங்கிணைப்பில்
விடியும் பார்-ஈழ
தேசத்தின் விடுதலைச் சிரிப்பு!

தேன்இதழ்கள் மோதலிலே
காதல் சிரிப்பு-அந்த
இயற்கைமகள் பார்வையிலே
அழகின் சிரிப்பு!

அபிராமி கவிதாசன்
02.01.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading