மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்—258

தலைப்பு:
மாறுமோ மோகம்
……………..

தேர்தலில் விவசாயி சின்னம்
தீர்ப்பு வருமா? என்று –
நாம் தமிழர்க்கு
மாறுமோ மோகம்!

ஈழ விடுதலை
மலர வேண்டுமென்று
புலம் பெயர்
தமிழர்க்கு மாறுமோ மோகம்!

ஈன்ற தன்மகனைச்
சான்றோன் ஆக்க வேண்டுமென்று
தாய்க்கு மாறுமோ மோகம்!

மனம் கவர்ந்த
காதலனை அடைய
வேண்டுமென்று
காதலிக்கு மாறுமோ மோகம்!

காதல் வலை வீசி
கவிதை மொழிபேசி
வஞ்சியரை ஏமாற்றுவதில் – சில
வஞ்சகர்க்கு மாறுமோ மோகம்!

அடுத்தவர் பணத்தை
ஆட்டையைப் போடுவதில் – சில
அயோக்கியர்க்கு மாறுமோ மோகம்!

நம்பவைத்துக்
கழுத்தறுக்கும் – சில
நரியர்க்கு ஏமாற்றிப் பிழைப்பதில் என்றுமே
மாறுமோ மோகம்!

திருக்குறளைப் பரப்புவதில்
என் ஆருயிர் மகன்
கவிதனுக்கு மாறுமோ மோகம்!

புலம்பெயர்
தமிழர்க்கு தமிழ்மீது
உள்ள பற்று என்பது
எந்நிலையிலும்
மாறுமோ மோகம்!

நான் இருக்கும் வரை
இறக்கும் வரை
கவிதைமேல் எனக்கு
இருக்கும் தாகம் என்பது
மாறுமோ மோகம்!

—- அபிராமி கவிதாசன்
26.03.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading