“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சிறுமை கண்டு பொங்குவாய்!
……………

பாலியல் வல்லுறுவுக் கெதிராகப் பொங்கு வாய் – தமிழ்ப்
பண்பாட்டைச் சீரழிக்கும் கொடுமைக்கு
எதிராகப் பொங்குவாய்!

மதுபோதை கஞ்சா வைத் தடை செய்யப் பொங்கு வாய் – நம்
மாவீரர்கள் கனவை நனவாக்கப் பொங்குவாய்!

அன்னைத் தமிழ் காக்க அயராது பொங்குவாய் – நம்
மக்களைக் கொன்றவனை மறு படி கொல்லப் பொங்குவாய்!

நன்செய் நிலங்களை நஞ்சாக்கும் அரசுக்கு எதிராகப் பொங்குவாய் – இயற்கை
உரமிட்டு பயிர் செய்யும் பழந்தமிழர் முறைகாணப் பொங்குவாய்!

புத்தாண்டுத் தைத்திங்கள் பொங்கலாய்ப் பொங்குவாய் – அனைத்துக்
கொடுமைக்கு எதிராகப் பொங்குவாய்!

– ஆசிரியை;
– அபிராமி கவிதாசன்

Nada Mohan
Author: Nada Mohan