கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

அமுதான தமிழ்

ரஜனி அன்ரன்

தமிழ் என்றால் அமுது
தமிழ் என்றால் அழகு
தமிழ் என்றால் இனிமை
அள்ள அள்ளக் குறையாத செழுமை
அள்ளிப் பருகிவிட்டால் இனிமை
எல்லைகள் கொண்ட பெருமை
எல்லையில்லாத் தொன்மை
அத்தனையும் கொண்டதே அமுதத் தமிழ் !

கால வெள்ளத்தில் நீந்தி
கரை புரண்டு ஓடி
வடவேங்கடம் தொட்டு தென்குமரி ஈறாக
கங்கை தொட்டு கடாரம் வரை பாய்ந்து
சிங்களம் தொட்டு புட்பகம் வரை
எல்லை வகுத்தது அமுதத் தமிழே !

முன்பின் என்ற வரலாற்றைத் தாங்கி
அகம் புறமென வாழ்வினைப் பிரித்து
வாழ்விற்கு இலக்கணம் வகுத்து
இலக்கியம் தந்த ஒரே மொழி அமுதத்தமிழ்
மொழிகள் எல்லாம் பிறந்தே சிறக்க
அமுதத்தமிழ் சிறந்தே பிறந்து
அரியணை ஏறியதே !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading