மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

அழிவு

ராணி சம்பந்தர்

ஆதி கால மனிதன் பாதிக்காலம்
சோதிப்பிழம்பின் இயற்கையோடு
மனம் நிறைவாகத் துதி பாடினான்

விதிகால விஷம் மோதிடும் காலம்
வீதியிலே அனாதையாக அலம்பிட
நாதியற்ற கனத்த இதயம் செயற்கை
வினையிலே சதியையே தேடினான்

ஞாலம் பொறுமை இழந்தத கோலம்
அன்னை பூமாதேவி கொதித்துறுமிட
சும்மாதான் இருந்திடுமா ஆழும் பூமி

மழை வெள்ளம் கூட்ட வீடோ தகர்க்க
மலை பிழக்க விலை மதிப்பற்ற உயிர்
மண் சரிவிலே புதைந்து துறந்திடவே

மூடுபனி கொட்டோ கொட்ட நகர் முடங்க
வாயில் நுழையாத புதுப்புதுப் பெயரோடு
சுற்றிச் சுழலும் சூறாவளியில் அழிவுதான்.

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading