சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

” ஆணினமே வாழி “

ரஜனி அன்ரன் (B.A) ” ஆணினமே வாழி ” 20.11.2025

தந்தையாய் தலைவனாய் தனயனாய்
தன்னலமின்றியே தலைமுறை காத்து
மலைபோல் பாரத்தைத் தலைமேல்சுமந்து
குடும்பத்தின் கோபுரமாய் குன்றின்விளக்காய்
உழைத்திடும் ஆணினமே அனைத்துலகும் போற்றிடுதே
கார்த்திகைத் திங்கள் பத்தொன்பதாம் நாளை
அனைத்துலக ஆண்கள்தினமாக !

நிழலாய்நின்று துணையாகி
நிஜமாய் வாழ்வில் இணையாகி
புயலாய் வெளியில் தெரிந்தாலும்
மழைத்துளியாய் நனையும் உம்இதயம்
ஆயிரம்கவலைகள் இருந்தாலும்
அர்ப்பணிப்பில் இசையாகுமே உம்இதயம் !

நம்பிக்கை முனைப்பில் வாழ்வினை நகர்த்தி
குடும்பத்தின் தூணாகி குதூகலத்தின் அரணாகி
சுமைகளைச் சுகமாகசுமந்திடும் ஆணினமே
உங்களை நீங்களே பாராட்டும்நாள்
உணர்வோடு நின்று பார்க்கும்நாள்
ஆணினமே வாழ்த்துக்கள் உமக்கு !