“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

இது எல்லாம் இப்ப எங்கே?

சிவருபன் சர்வேஸ்வரி

இது எல்லாம் இப்ப எங்கே…?

சுதந்திரக் காற்றே தூதுபோ கொஞ்சம் //
நிரந்தரம் இல்லாத நிமிடங்கள் கோடி //
வசிப்பிடம் அற்ற வாழ்விடங்கள் பலதும் //
இப்படியே ஆட்டம் பறந்து கொள்கின்றது //
எப்போதெல்லாம் மனிதம் சிறக்குமோ தெரியாது //
அன்றுபோல் இன்றில்லையே வாழ்வுகளின் மலர்வு//

பரபர விறுவிறு சடசட படபட இரட்டைக் கிழவியாட்டம் //

நடநட நடவென நாட்டிலே எங்கோர் மூலையிலே //

பந்தம் பாசம் பறந்து கடந்த உறவுகள் //

ஒண்ணாய் இருந்து ஒரு குழையல் சாதம் உண்பதும் உண்டா//
ஊமையாய் இருந்து உழன்று திரியும்காலமே //

இது எல்லாம் எப்போவருமோ ஏக்கமே //

இன்னிலை என்று தணியுமோ எதிர்பார்ப்பே //
இலைமறைகாயாய் அகமதில் இடிக்கும் எண்ணமே //
தலைமுறை கண்டு தளராமல் நிற்கவே வருவாயே //
நிலமையில் என்றும் நிதர்சனமாய் நிம்மதியே //
வலம்வருமா இது எல்லாம் இப்போது நடக்குமா //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan