19
Jun
கணப்பொழுதில்
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
சாந்தி
———
துன்பம் களைந்து துணிவு கொள்ள
இன்பம் மலரும் இனிமையில் சாந்தி
வன்மம் ஓய்ந்து வாய்மை வென்று
நன்மை பெருக நயம்பெறும் சாந்தி
காதல் கொள்ளக் கீதம் தருமே
மோதல் இன்றிய முகவரி பெறுமே
பாதனை வடித்திடப் பொறுமை வேண்டுமே
சாதல் வரினும் சாந்தி கொள்ளவே
எல்லாம் நன்மைக்கே எதிலும் திருப்தியாய்
வல்லமை அடைந்திட வளமாகச் சாந்தி
தொல்லைகள் நீங்கித் தன்னலம் பெற்றிடவும்
எல்லைகள் அற்ற ஆனந்தமே சாந்தி .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.