இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இராசையா கௌரிபாலா.

இலக்கு
————
கனவுகள் மெய்ப்படக் காரணம் வேண்டும்
மனக் கதவுகள் மீதமாய்த் திறந்திடவே
கனதிகள் அதிகம் காற்றினில் பறந்திட
தனதாகும் இலக்கு தீர்வாய் அமையும்

ஒற்றைச் சிந்தனை ஓராயிரம் தோல்விகள்
பற்றியது மாறாது பண்பட வசமாகும்
வெற்றியே இலக்கு வெண்மை உள்ளத்தில்
உற்றவை கிடைக்கும் உயரத்தை அடைந்திடவே

தெளிந்த சிந்தை தீரா வேட்கையுடன்
களிறு பலத்துடன் காதல் கொள்ளவே
ஒளியது வாழ்வை ஒளிரச் செய்யும்
உளியை வைத்து உணர்வைச் செதுக்கிடவே.

இராசையா கௌரிபாலா.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading