அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

இராசையா கௌரிபாலா

தைமகளை வாழ்த்துவோம்
————————————-
தைத்திருநாள் வந்ததே தைமகள் முற்றத்தில்
எத்திக்கும் கொண்டாட்டம் ஏர்முனையில்-புத்துணர்ச்சி
தித்திப்பு பொங்கியே தேனாய் இனித்திடும்
முத்தமிழ்ப் பண்பாட்டின் மூச்சு.

திருநாளாம் இன்று தரணியிலே பொன்னாள்
திருமலர்ந்த இன்பத் தினமாம்-தருவாய்
விரும்பி உழவர் விதைத்தே அறுத்த
பெருவாரி நெல்மணி பெற்று.

போற்றிடும் நாளே பொழுதினில் சூரியனை
சேற்றினில் கால்வைத்த சேவையர்- சோற்றினைப்
பேற்றுடன் தந்தாரே போரினை வைத்துமே
ஆற்றுகை காண்பர் அறம்.

இராசையா கௌரிபாலா.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading