14
May
குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
தைமகளை வாழ்த்துவோம்
————————————-
தைத்திருநாள் வந்ததே தைமகள் முற்றத்தில்
எத்திக்கும் கொண்டாட்டம் ஏர்முனையில்-புத்துணர்ச்சி
தித்திப்பு பொங்கியே தேனாய் இனித்திடும்
முத்தமிழ்ப் பண்பாட்டின் மூச்சு.
திருநாளாம் இன்று தரணியிலே பொன்னாள்
திருமலர்ந்த இன்பத் தினமாம்-தருவாய்
விரும்பி உழவர் விதைத்தே அறுத்த
பெருவாரி நெல்மணி பெற்று.
போற்றிடும் நாளே பொழுதினில் சூரியனை
சேற்றினில் கால்வைத்த சேவையர்- சோற்றினைப்
பேற்றுடன் தந்தாரே போரினை வைத்துமே
ஆற்றுகை காண்பர் அறம்.
இராசையா கௌரிபாலா.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.