இராசையா கௌரிபாலா.

வாழ்க்கைப்பாடம்
—————————
மனிதன் கடந்து செல்லும்
காலத்தின் மாற்றம்
அதுவே வெற்றியாகவும்
அதுவே அனுபவமாகவும்
இருவேறு நிலைகளைத் தருகின்றது.

வென்றவன் தலைக்கனத்தில்
துள்ளிக் குதிக்கிறான்
ஏணியில் ஏறி உயரத்தை
அடைய நினைத்தவன்
கீழே விழுந்தும்
மீண்டும் எழுந்து
இதுவொரு படிப்பினை
எனவாறே முயல்கிறான்.

தோல்வியை ஏற்றுக்
கொள்பவன்
அடுத்த கட்டத்தை தீர்மானிக்கின்றான்
அதில் நாளை
வெற்றியும் அடைகிறான்
தோல்வியை ஏற்றுக் கொள்ளாதவன்
மீண்டெள முடியாது தவிக்கிறான்.

எல்லாமே வாழ்க்கையின்
படிப்பினைகள் முயலாமை
என்று எதுவும் இல்லை
ஏதோ நாளுக்கு நாள்
கற்றுக் கொண்டுதான்
இருக்கிறோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading