சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

இராசையா கௌரிபாலா.

வாழ்க்கைப்பாடம்
—————————
மனிதன் கடந்து செல்லும்
காலத்தின் மாற்றம்
அதுவே வெற்றியாகவும்
அதுவே அனுபவமாகவும்
இருவேறு நிலைகளைத் தருகின்றது.

வென்றவன் தலைக்கனத்தில்
துள்ளிக் குதிக்கிறான்
ஏணியில் ஏறி உயரத்தை
அடைய நினைத்தவன்
கீழே விழுந்தும்
மீண்டும் எழுந்து
இதுவொரு படிப்பினை
எனவாறே முயல்கிறான்.

தோல்வியை ஏற்றுக்
கொள்பவன்
அடுத்த கட்டத்தை தீர்மானிக்கின்றான்
அதில் நாளை
வெற்றியும் அடைகிறான்
தோல்வியை ஏற்றுக் கொள்ளாதவன்
மீண்டெள முடியாது தவிக்கிறான்.

எல்லாமே வாழ்க்கையின்
படிப்பினைகள் முயலாமை
என்று எதுவும் இல்லை
ஏதோ நாளுக்கு நாள்
கற்றுக் கொண்டுதான்
இருக்கிறோம்.

Nada Mohan
Author: Nada Mohan