மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

இராசையா கௌரிபாலா

ஏறு போல் நட
———————
கூரிய கண்ணில் கர்வம் கொண்டே
நேரிய அவன்சொல் நன்நெறி காக்கும்
வீரியமாய் நெஞ்சும் வளையாத பாங்கும்
பேரினைச் சொல்லும் பேராளன் காளையென்று

அறமதைப் பேணும் ஆடவனாய் நற்றலைவன்
மறமதைப் புரிந்து மரித்திடத் துணிவுடன்
புறமதில் குத்தாத போர்வாழ் கொண்டே
இறப்புடன் வீரன் இறவா வரத்துடனே

நற்பண்பு கொண்டே நாணிலம் போற்றிட
கற்பாக ஏற்றுக் காத்திடும் அரசன்
பற்றாளன் என்றே பறைசாற்றி நிற்கும்
விற்பன்ணன் ஏறுபோல் வையத்தில் வாழ்வான்.

இலண்டனிலிருந்து
இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading