கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

இரா.விஜயகௌரி தீதும் நன்றும்……….

இரா.விஜயகௌரி

தீதும் நன்றும் தினத்தின் விதைப்பே
பொருள் நிறை உழைப்பு புதுமையின் படையல்
அரண்டவன் மடிந்தால் அரவமும் தீண்டும்
விடியலை வரைவோன் விதியும் வரைவான்

நாளைய பொழுதினை நமக்கென வரைய
இன்றைய நொடியை கணித்திடல் சிறப்பே
வாழ்வின் கணக்கை வரைபவன் எவனோ
நாணிடிம் நிலைதனை மாற்றிட உழைப்பான்

சிந்தனைக்கதவுகள் சீர்படத்திறந்தால்
மெய்ப்படும் வாழ்வியல். பொய்ப்படாதிருக்கும்
ஏற்றமும் இறக்கமும இயல்பெனக்கொண்டால்
ஏற்றப்படிகளை செதுக்கிட முடியும்

சொல்லும் செயலும் பிறழாதிருப்போர்
செயற்படும் தொடுகையில் உயர்வின் தெறிப்பே
ஆற்றலும் அறிவும் நமதாயிருப்பின்
அழிவினைத் தடுத்து ஆக்கத்துள் விதைப்போம

Nada Mohan
Author: Nada Mohan