19
Mar
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125
வரமானதோ வயோதிபம்..!!
வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை...
19
Mar
என் பிறந்தநாள்
கவி அரும்பு 227
Abirami Manivannan
பிறந்தநாள்
என் பிறந்தநாள்
மகிழ்வான நாளே...
19
Mar
வரமானதோ வயோதிபம்
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே...
இரா.விஜயகௌரி. வைகாசித்திங்களில். வைகறை இருட்டாச்சே
இரா.விஜயகௌரி
தமிழினத்தின். வரலாற்றில்
நீண்ட துயர் சுமந்த திங்களிது
உயிர்காக்க உறவு சுமக்க
பதறித்துடித்து பதைபதைத்த பொழுதுகள்
விடியாத இரவுகளை விடி வெள்ளி எழுதியது
எழுதாத சோகத்தில் தத்தளித்த மணித்துளிகள்
குண்டும் குழியும் வெடியும் ரணமுமாய்
குருதி பொழிந்த தேசத்தின் சுவடுகள்
நிராதரவாய்நிதர்சனத்தை தரிசித்து
நிர்மூலமாகிப் போன நடைப்பிணங்பளாய்அவர்கள்
ஏதிலிகளாய் நாதியற்று நடுத்தெருவில்
கேட்பாரற்றுப்போன வெடிகுண்டுச் சிதறல்கள்
ஆம் முள்ளி வாய்க்கால் வரைந்தெழுதிய
முரணான தேசத்தின். ரணத்தின் பெருவலி
துயரை இன்றும் சுமந்துகாணாமல் தேடும்
உறவிழந்த உயிர்களின் பெருவலி
ஆம் வைகாசித் திங்களின் வைகறை
இருட்டின் பெருங்கரத்துள்பெருந்துயரானது
அவலத்தின் பெருங்கதை

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...