நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

இரா.விஜயகௌரி. வைகாசித்திங்களில். வைகறை இருட்டாச்சே

இரா.விஜயகௌரி

தமிழினத்தின். வரலாற்றில்
நீண்ட துயர் சுமந்த திங்களிது
உயிர்காக்க உறவு சுமக்க
பதறித்துடித்து பதைபதைத்த பொழுதுகள்

விடியாத இரவுகளை விடி வெள்ளி எழுதியது
எழுதாத சோகத்தில் தத்தளித்த மணித்துளிகள்
குண்டும் குழியும் வெடியும் ரணமுமாய்
குருதி பொழிந்த தேசத்தின் சுவடுகள்

நிராதரவாய்நிதர்சனத்தை தரிசித்து
நிர்மூலமாகிப் போன நடைப்பிணங்பளாய்அவர்கள்
ஏதிலிகளாய் நாதியற்று நடுத்தெருவில்
கேட்பாரற்றுப்போன வெடிகுண்டுச் சிதறல்கள்

ஆம் முள்ளி வாய்க்கால் வரைந்தெழுதிய
முரணான தேசத்தின். ரணத்தின் பெருவலி
துயரை இன்றும் சுமந்துகாணாமல் தேடும்
உறவிழந்த உயிர்களின் பெருவலி

ஆம் வைகாசித் திங்களின் வைகறை
இருட்டின் பெருங்கரத்துள்பெருந்துயரானது
அவலத்தின் பெருங்கதை

Nada Mohan
Author: Nada Mohan